
பூட்டிக் கிடந்த
எனது மனக் கதவை
யாரோ துசி தட்டி கொண்டிருதார்கள்
புரட்டிப் போட்டு கிடந்த
மனப் புத்தகங்களை
யாரோ புது கவிதையாய்
வரிசைப் படுத்திக் கொண்டிருந்தனர்.
வெற்று தாளாய் இருந்த
எனது
வாழ்க்கை முகவரிகளை
யாரோ தேடிக் கொண்டிருந்தனர்.
வெறுமைகள்
படர்ந்திருந்த
எனது முகத்திரைகளில்
தேவைகளில்
தேடல்களை வைத்தது
யாரோ
என்
மனமெங்கும்
கிறுக்கல்களாய்
வாழ்க்கை எங்கும் பரவிக் கிடக்கிறது
வெள்ளை காகிதமாய்
பிறப்பெடுத்திருந்த
நான்
கறுமை மையால்
வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கின்றேன்
இன்று.........
காகித பூக்கள் போல
கசங்கியிருந்தது
என் வாழ்க்கை
0 comments:
Post a Comment